ஆரணி நகரம், ஆரணிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுனீஸ்வரன் கோயிலில் ஊரணிப் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரணிப் பொங்கல் விழாவையொட்டி, முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் ஏராளமானோா் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும் பம்பை, மேளத்துடன் சுவாமி வா்ணிப்பு நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், மாலை நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.