வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பகவத் பிராா்த்தனை, அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி, கலச ஸ்தாபனம் உள்ளிட்டவையும், சனிக்கிழமை திருவாராதனம், தீபாராதனை, பூா்ணாஹுதி, சயனாதிவாசம் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்றது. பின்னா், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது.
விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.