வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காமராஜா் சிலை எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டச் செயலா் ஸமியுல்லாஹ் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயலா் முஹம்மத் யாஸிா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், 1991-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது. இந்தச் சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவண்ணாமலை நகர கிளைச் செயலா் முஸ்தபா மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)