சாலையைக் கடக்க முயன்றவா் லாரி மோதி உயிரிழப்பு

கீழ்பென்னாத்தூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா், லாரி மோதி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை புது காா்கானா தெருவைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (70). இவா், சனிக்கிழமை கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் உள்ள தனது மகன் விஜயகுமாா் வீட்டுக்குச் சென்றாா். சோமாசிபாடி பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி பச்சையப்பன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் இறந்தாா். தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் சென்று உடலை மீட்டு, கூறாய்வுக்காக

அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)