வீரபாண்டியில் சித்திரை திருவிழா தொடக்கம்: 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கம்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது. இதற்காக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொழுது போக்கு அம்சமாக ராட்டினங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவானது, ஆண்டுதோறும் சித்திரை கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி, வைகாசி முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, கடந்த ஏப்.17-ம் தேதி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். அன்று முதல் பக்தர்கள் திருக்கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)