ஸ்ரீரங்கம் கோயில் மாடுகளுக்கு ரூ.2.50 கோடியில் புதிய கோசாலை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோசாலையில் உள்ள மாடுகளுக்காக ரூ.2.50 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதிய கோசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக பசு மாடுகளை வழங்குவது வழக்கம். இவ்வாறு வழங்கப்பட்ட 60-க்கும் அதிகமான மாடுகள்,கன்றுகள் ஆகியவை கோயில் கொட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாடுகளுக்கு பல்வேறு வசதிகளுடன் புதிதாக கோசாலை அமைக்க இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)