ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மே 6-ம் தேதி நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் ரெங்கநாதருக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருள்கள் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புமிக்கதாகும். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து ரெங்கமன்னாரை(ஶ்ரீரங்கம் ரெங்கநாதர்) மணந்து கொண்டார்.