மதுரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் – கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ல் தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க சுந்தர ராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் ஏப்.21-ல் அழகர்மலையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார். ஏப்.22-ல் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. ஏப்.23-ம் தேதி அதிகாலை 6.02 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர், ஏப்.24-ம் தேதி தேனூர் மண்டபத்தின் முன் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)