காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா 5 நாட்கள் நடத்தப்படுமா?

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவை, ஏற்கெனவே நடத்தப்பட்டது போல 5 நாள் நிகழ்வுகளாக நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில், கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சார்பில், காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. 4 நாட்கள் நடத்தப்பட்டு வந்த இவ்விழா நிகழ்வுகள், கடந்த 2019-ம்ஆண்டு 5 நாட்களாக நீட்டித்து நடத்தப்பட்டது. அதன்பின், கரோனா பரவல் சூழலால் 2020, 2021-ம்ஆண்டுகளில் பெருமளவில் பக்தர்கள் பங்கேற்பின்றி 5 நாள் நிகழ்வுகளாகவே நடத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)