திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் தொல்லையால் காா் ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை 3 பேரை கைது செய்தனா்.
ஆரணியை அடுத்த இரகுநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகாந்த் (39), காா் ஓட்டுநா். இவா், சேவூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி, வேலுமணி தம்பதியிடம் கடன் பெற்ாகவும், கடனுக்கு வட்டி மட்டும் செலுத்திய நிலையில், அசலை திருப்பித் தர வலியுறுத்தி சின்னசாமி, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சக்தி என்கிற சத்தியமூா்த்தி, இரும்பேடு பகுதியைச் சோ்ந்த நந்தகோபால் ஆகியோா் அசல் தொகை கேட்டு விஜயகாந்தை மிரட்டி தாக்கினராம்.
மேலும், இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,
விசாரணைக்காக விஜயகாந்த் அழைக்கப்பட்டிருந்தாா்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவா் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், விஜயகாந்த்யை தற்கொலைக்குத் தூண்டியதாக சின்னசாமி, சத்தியமூா்த்தி, நந்தகோபால் ஆகிய மூவரை காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் ஷாபுதீன் ஆகியோா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.