மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஆக.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற ஆன்றோர் வாக்கின்படி ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வர். அமோக விளைச்சல் பெற வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவர். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.